Label 10

Trending Topic

Latest Post

சம்பூர் கைத்தொழில் பேட்டையில் 10000 பேருக்கு தொழில்வாய்ப்பு தமிழ் பிரதேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பு- பாதிப்புகள் இருந்தால் T.N.A. தெளிவுபடுத்தட்டும்

Written By ammaan on புதன், 18 செப்டம்பர், 2013 | 10:34 AM

சம்பூர் கைத்தொழில் பேட்டை மூலம் அப்பிரதேச மக்களே அதிக நன்மை அடைய உள்ளனர். இதனூடாக 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு கிட்ட உள்ளது. தமிழ் மக்கள் மீது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு உண்மையான பற்று இருந்தால் இவ்வாறான அபிவிருத்திகள் தொடர்பில் தவறான குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்த வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதினூடாகவே அவர்கள் இங்கு முதலிட முன்வருவர். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங் கியதால் அங்கு முதலீடுகள் அதிகரித்து வளர்ச்சி ஏற்பட்டது.
சம்பூர் தொழிற்பேட்டை பாரிய நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதனூடாக அப்பகுதி இளைஞர் யுவதிகள் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட உள்ளது.
ஆனால் சம்பூர் தொழில் பேட்டை குறித்து எதிர்க் கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை செய்கின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் பிரதேசங்களை கைப்பற்றுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. தொழிற்பேட்டை அமைக்க வாய்ப்பான உகந்த பகுதி என்பதாலே சம்பூர் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இறங்குதுறை அமைப்பதற்கு கடலை அண்டிய பகுதி தேவை.
மட்டக்களப்பு மாவட்டம் கடந்த 6 வருட காலத்தில் பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. இங்கு பாரிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியது தொடர்பில் ஜனாதிபதியின் பெயர் வரலாற்றில் பதியப்படுவது உறுதி.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலே வீதிப் போக்குவரத்தில் பாரிய வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்க் கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை மேற்கொள்கின்றன.
சம்பூர் பிரதேசத்திலுள்ள 1272 குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்றி வருகிறோம். 342 குடும்பங்கள் முகாம்களில் உள்ளதோடு அவர்களுக்கு சொந்த நிலங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு காணி வழங்கி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த அபிவிருத்தியினூடாக சம்பூர் பிரதேச மக்களே அதிகம் நன்மை அடைய உள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் மீது உண்மையில் பற்று இருந்தால் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தமாட்டார்கள்.
இலங்கைக்கு வருகை தந்த நவநீதம்பிள்ளை புலிகள் பயங்கரவாத அமைப்பு என சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் இலங்கையில் இடம்பெறும் சிறப்பான மாற்றங்கள் குறித்து அவர் உணர்ந்துகொள்வார்.
நாட்டில் இடம்பெறும் முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம், தேர்தலில் தாம் வெல்வதற்காக மக்களை திசை திருப்பும் செயலாகும்

Written By ammaan on செவ்வாய், 17 செப்டம்பர், 2013 | 10:59 AM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம், தேர்தலில் தாம் வெல்வதற்காக மக்களை திசை திருப்பும் செயலாகும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

“மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் ஊடகவியலாளர் ஒருவரினால் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
யுத்தத்திற்கு பின்னர் வட கிழக்கில் மட்டுமல்லாது நாடு பூராகவும் சமாதானம் நிலவுகின்ற இக்காலப் பகுதியில் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுகின்றது.

உண்மையில் இத்தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதுடன், இதில் தமிழ் மக்கள் சுதந்திரமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலை நடாத்துகின்றார்.

அது மாத்திரமல்லாமல் மாகாண சபை முறைமைகள் இந்நாட்டில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.

இது இவ்வாறிருக்க இந்நாட்டில் மீண்டும் யுத்தம் நடைபெறும், உரிமைகள் பறிக்கப்பட்டால் மீண்டும் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறி வடக்கு மக்களை இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திசை திருப்ப முனைகிறது.

த.தே.கூ அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை இனத்துவேசமிக்க ஒன்றாக தயாரித்துள்ளது.

இந்நாட்டில் கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது நாம் வடக்கு கிழக்கு மக்கள் பல உயிரிழப்புக்களையும் உடைமைகள் சேதம் என்பவற்றைச் சந்தித்தோம்.

ஆனால், இன்று நாம் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றோம்.

யுத்தம் நடைபெற்று 3, 4 ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் வரலாறு காணாத அபிவிருத்தி கண்டுள்ளது.

ஏனெனில், கிழக்கு மக்கள் தேவை உணர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து முழு பயனையும் அடைந்துள்ளனர்.

அதே அபிவிருத்தியை வட மாகாணமும் அடைய வேண்டுமானால், இந்தத் தேர்தலை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்து வட மாகாணத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வழியமைக்க வேண்டும்.

இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்லலாம் அல்லது ஸ்ரீ.ல.சு.க அரசாங்கம் வெல்லலாம் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வெல்லலாம்.

ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இத்தேர்தலில் எவ்வாறு நாம் பயன்பெறுவது, நன்மைகளை எப்படி அடைந்து கொள்வது என்பது தொடர்பில் வட மாகாண மக்கள் சிந்திக்க வேண்டும். சிந்தித்து அவர்களுடைய வாக்குகளை அரசாங்கத்திற்கு அளிப்பதன் மூலம் வட மாகாணத்தை அபிவிருத்திமிக்க முன்னேற்றகரமான மாகாணமாக மாற்ற முடியும்.

ஆகவே, இனப்பிரச்சினைகளை பூதாகரமாக ஊதுபவர்களை நம்பாமல், நன்றாக சிந்தித்து இந்த தேர்தலை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த வடக்கு மக்கள் முன் வர வேண்டுமெனவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டம் மட்டக்களப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம், தேர்தலில் தாம் வெல்வதற்காக மக்களை திசை திருப்பும் செயலாகும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

“மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் ஊடகவியலாளர் ஒருவரினால் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
யுத்தத்திற்கு பின்னர் வட கிழக்கில் மட்டுமல்லாது நாடு பூராகவும் சமாதானம் நிலவுகின்ற இக்காலப் பகுதியில் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுகின்றது.

உண்மையில் இத்தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதுடன், இதில் தமிழ் மக்கள் சுதந்திரமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலை நடாத்துகின்றார்.

அது மாத்திரமல்லாமல் மாகாண சபை முறைமைகள் இந்நாட்டில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.

இது இவ்வாறிருக்க இந்நாட்டில் மீண்டும் யுத்தம் நடைபெறும், உரிமைகள் பறிக்கப்பட்டால் மீண்டும் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறி வடக்கு மக்களை இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திசை திருப்ப முனைகிறது.

த.தே.கூ அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை இனத்துவேசமிக்க ஒன்றாக தயாரித்துள்ளது.

இந்நாட்டில் கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது நாம் வடக்கு கிழக்கு மக்கள் பல உயிரிழப்புக்களையும் உடைமைகள் சேதம் என்பவற்றைச் சந்தித்தோம்.

ஆனால், இன்று நாம் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றோம்.

யுத்தம் நடைபெற்று 3, 4 ஆண்டுகளுக்குள் கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் வரலாறு காணாத அபிவிருத்தி கண்டுள்ளது.

ஏனெனில், கிழக்கு மக்கள் தேவை உணர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து முழு பயனையும் அடைந்துள்ளனர்.

அதே அபிவிருத்தியை வட மாகாணமும் அடைய வேண்டுமானால், இந்தத் தேர்தலை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்து வட மாகாணத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வழியமைக்க வேண்டும்.

இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்லலாம் அல்லது ஸ்ரீ.ல.சு.க அரசாங்கம் வெல்லலாம் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வெல்லலாம்.

ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இத்தேர்தலில் எவ்வாறு நாம் பயன்பெறுவது, நன்மைகளை எப்படி அடைந்து கொள்வது என்பது தொடர்பில் வட மாகாண மக்கள் சிந்திக்க வேண்டும். சிந்தித்து அவர்களுடைய வாக்குகளை அரசாங்கத்திற்கு அளிப்பதன் மூலம் வட மாகாணத்தை அபிவிருத்திமிக்க முன்னேற்றகரமான மாகாணமாக மாற்ற முடியும்.

ஆகவே, இனப்பிரச்சினைகளை பூதாகரமாக ஊதுபவர்களை நம்பாமல், நன்றாக சிந்தித்து இந்த தேர்தலை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த வடக்கு மக்கள் முன் வர வேண்டுமெனவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் நடைபெற்றது!

Written By ammaan on திங்கள், 16 செப்டம்பர், 2013 | 11:04 AM

இலங்கை::அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சார்ல்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட் உட்பட பல பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்த கருத்தரங்கில் பங்கு பற்றினர்.
இக்கருத்தரங்கில் பங்கு பற்றியவர்களுக்கு ,அரசாங்க தகவல் திணைக்களத்தின் தமிழ் வெளியீடான "திங்கள் "சஞ்சிகையும்  இங்கு விநியோகிக்கப்பட்டன.


 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BATTICALOA - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger